search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மீனவர்கள் மீது தாக்குதல்- பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

    இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த 12-ந் தேதி, குஜராத் கடலோர பகுதியில் ‘ஓம்கார்’, ‘மகாசாகர்’ என்ற 2 மீன்பிடி படகுகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே கப்பலில் வந்த பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு படையினர் அந்த படகுகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு மீனவர் காயமடைந்தார். இந்த திட்டமிட்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஏற்கனவே வகுக்கப்பட்ட விதிமுறைகளையும், நடைமுறைகளையும் மீறிய செயலாகும். இதுபோன்ற தேவையற்ற தாக்குதல்களில் ஈடுபடக்கூடாது என்று தனது கடல்சார் படைக்கு பாகிஸ்தான் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×