என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களுக்கு மேலும் ரூ.15,000 கோடி நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்
Byமாலை மலர்9 April 2020 3:50 PM GMT (Updated: 9 April 2020 3:50 PM GMT)
கொரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு இரண்டாவது கட்டமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:
சீனாவில் தோன்றிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்புப் பணிகளுக்கு தங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வந்தன.
இதற்கிடையே, கொரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முதல் கட்டமாக 11 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அனுமதி அளித்தது.
இந்நிலையில், கொரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு இரண்டாவது கட்டமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலங்களுக்கு இத்தொகை 3 தவணைகளாகப் பிரித்துக் கொடுக்கப்படும். இத்தொகை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X