search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார்
    X
    அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார்

    கொரோனா சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளுக்கு இரு மடங்கு சம்பளம் - அரியானா முதல்வர்

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரு மடங்கு சம்பளம் வழங்கப்படும் என அரியானா அரசு தெரிவித்துள்ளது.
    சண்டிகர்:

    இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
     
    இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் 170 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரு மடங்கு சம்பளம் வழங்கப்படும் என அரியானா அரசு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் கூறுகையில், கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் டெஸ்ட் எடுப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரு மடங்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×