search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1135 ஆக அதிகரிப்பு

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 1135 ஆக அதிகரித்துள்ளது.
    மும்பை:

    கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு  உள்ளது. 

    இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று ஆயிரத்தை தாண்டியது. அங்கு மொத்தம் 1018 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 1135 ஆக அதிகரித்துள்ளது.
    கொரோனா வைரசால் இன்று 8 பேர் பலியாகினர். இதன்மூலம் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×