search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    காஷ்மீர் என்கவுண்டர் - ஜெய்ஷ் இ மொகமது இயக்க கமாண்டர் சுட்டுக் கொலை

    காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஜெய்ஷ் இ மொகமது இயக்கத்தின் கமாண்டர் சுட்டுக் கொல்லப்பட்டான்.
    ஸ்ரீநகர்: 

    காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் உள்ள ஆரம்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

    பாதுகாப்பு படையினரை கண்டதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்குபாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
     
    இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ மொகமது இயக்கத்தை சேர்ந்த கமாண்டர் சஜ்ஜத் நவாப் தர் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டைநடைபெற்று வருகிறது  என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×