search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி
    X
    முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி

    கிளை சிறையில் இருந்து மெகபூபா முப்தி வீட்டுக்கு மாற்றம்

    முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கிளை சிறையில் இருந்து அவருடைய அலுவலக இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து வீட்டுக்காவலில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அந்த மாநில முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

    இதில் அம்மாநில முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முக்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டனர். இந்தநிலையில் காஷ்மீரின் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள கிளை சிறையில் காவலில் வைக்கப்பட்டு இருந்த மெகபூபா முப்தி, பேர்வியூ குப்கர் சாலையில் இருக்கும் அவருடைய அலுவலக இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து வீட்டுக்காவலில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருந்த பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா கடந்த மாதம் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×