என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொரோனாவால் பாதித்த ஒருவர் 406 பேருக்கு நோயை பரப்புகிறார் - மருத்துவ கவுன்சில் ஆய்வில் தகவல்
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிர் பலிகளும் உயர்ந்து வருகிறது. நோயை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு மற்றும் சமூக விலகல் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் நோய் பரவுதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே சமூக விலகலை மிக கடுமையாக கடைபிடிக்கும்படி மத்திய அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ்அகர்வால் கூறியதாவது:-
சமூக விலகல் திட்டத்தை சரியாக பின்பற்றாவிட்டால் நோய் பரவுவதை தடுப்பது கடினமாகும். சமூக விலகல் திட்டம் பல இடங்களில் சிறப்பாக கடைபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பாதிப்பு குறைந்திருக்கிறது.
கிழக்கு டெல்லி, ஆக்ரா, கவுதமபுத்தா நகர், மும்பை போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நல்ல முடிவு கிடைத்துள்ளது.
இதை பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களிலும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சமூக இடைவெளியை சரியாக பின்பற்றாவிட்டால் அவரால் 30 நாட்களில் 406 பேருக்கு நோய் பரவிவிடும் ஆபத்து உள்ளது என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளது.
ஆனால் அதே நபர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் 30 நாட்களில் 2½ நபர்களுக்கு தான் நோயை பரப்புவார். எனவே சமூக விலகல் மற்றும் ஊரடங்கு முறைகளை சரியாக பின்பற்றினால் நோயை கட்டுப்படுத்தி விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்