என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரிசோதனை வசதிகளை அதிகரிக்க வேண்டும் - மந்திரிகள் குழு சிபாரிசு
Byமாலை மலர்8 April 2020 2:41 AM GMT
கொரோனா பரிசோதனை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், மக்கள் கூடுவதை குட்டி விமானம் மூலம் கண்காணிக்க வேண்டும் என்றும் மந்திரிகள் குழு சிபாரிசு செய்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பரவலால் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்து சிபாரிசு செய்வதற்காக, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் 4-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், குழுவின் உறுப்பினர்களான மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், சதானந்த கவுடா, ராம்விலாஸ் பஸ்வான், நரேந்திரசிங் தோமர், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ஸ்மிரிதி இரானி, பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரிசோதனை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டது.
மத அமைப்புகளின் கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் திரள்வதாக கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. எனவே, ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் இத்தகைய சந்திப்புகளை கண்காணித்து தடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
இடம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்குமிடமும், உணவும் அளிக்கப்பட்டதற்கு கூட்டத்தில் திருப்தி தெரிவிக்கப்பட்டது. வேளாண் பணிகளை அனுமதித்ததற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கும், பாதுகாப்பு படையினருக்கும், அத்தியாவசிய பொருட்கள், உணவு, மருந்துகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் ஊழியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துகளையும், யோசனைகளையும் பிரதமர் மோடியிடம் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலால் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்து சிபாரிசு செய்வதற்காக, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் 4-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், குழுவின் உறுப்பினர்களான மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், சதானந்த கவுடா, ராம்விலாஸ் பஸ்வான், நரேந்திரசிங் தோமர், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ஸ்மிரிதி இரானி, பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரிசோதனை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டது.
மத அமைப்புகளின் கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் திரள்வதாக கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. எனவே, ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் இத்தகைய சந்திப்புகளை கண்காணித்து தடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
இடம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்குமிடமும், உணவும் அளிக்கப்பட்டதற்கு கூட்டத்தில் திருப்தி தெரிவிக்கப்பட்டது. வேளாண் பணிகளை அனுமதித்ததற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கும், பாதுகாப்பு படையினருக்கும், அத்தியாவசிய பொருட்கள், உணவு, மருந்துகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் ஊழியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துகளையும், யோசனைகளையும் பிரதமர் மோடியிடம் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X