என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு நடவடிக்கை - சுவீடன் பிரதமர், ஓமன் சுல்தானுடன் பிரதமர் மோடி உரையாடல்
Byமாலை மலர்7 April 2020 3:48 PM GMT (Updated: 7 April 2020 3:48 PM GMT)
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுவீடன் பிரதமர் மற்றும் ஓமன் சுல்தானுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
புதுடெல்லி:
சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுவீடன் பிரதமர் மற்றும் ஓமன் அதிபருடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுவீடன் பிரதமர் ஸ்டெபான் லோப்வென் மற்றும் ஒமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் தைமூர் அல் சையதுடன் தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது, இந்தியாவி்ல் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள சுகாதார, வர்த்தக ரீதியிலான சவால்களை எதிர்கொள்வது, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருநாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் பதிவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X