என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும்- மருந்து ஏற்றுமதி குறித்து ராகுல் கருத்து
Byமாலை மலர்7 April 2020 6:47 AM GMT (Updated: 7 April 2020 6:47 AM GMT)
இந்தியர்களின் தேவையைத் தாண்டி தான் மற்ற நாடுகளுக்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி கூறி உள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மருந்து தேவையை கருத்தில் கொண்டு பாராசிட்டமால், ஹைட்ரோகுளோரோகுயின் உள்ளிட்ட சில மருந்துகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இதனால் அமெரிக்காவால், கொரோனா தடுப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை இந்தியாவிடம் இருந்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில், இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
‘நட்பு என்பது பதிலடி குறித்தது அல்ல. இந்தியா அனைத்து நாடுகளுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் உதவ வேண்டும். ஆனால் உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு போதுமான அளவில் கிடைக்க வேண்டும். இந்தியர்களின் தேவையைத் தாண்டித்தான் உயிர் காக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும்’ என ராகுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X