search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    மும்பை அரசு ஆஸ்பத்திரிக்கு ப.சிதம்பரம் ரூ.1 கோடி நன்கொடை

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
    மும்பை :

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார். இந்த ஆஸ்பத்திரி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டுள்ளது.

    தனது நன்கொடை குறித்து மகாராஷ்டிரா மருத்துவ கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம் மூலம் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இந்த பணத்தை பயன்படுத்தி, மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு கவச உடைகள், தனிநபர் பாதுகாப்பு சாதன கிட்கள், உள்ளிட்டவை வாங்கப்படும் என்று மருத்துவ கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறினார். ப.சிதம்பரம், மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
    Next Story
    ×