search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கொரோனா தடுப்பு நடவடிக்கை - பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரேசில் அதிபர் ஜேர் பல்சோனரோவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
    புதுடெல்லி:

    சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

    இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு  உள்ளது. 

    இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரேசில் அதிபர் ஜேர் பல்சோனரோவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரேசில் அதிபர் ஜேர் பல்சோனரோவுடன் தொலைபேசியில் உரையாடினேன். கொரோனாவுக்கு எதிராக போராட இரு நாடுகளும் முழு பலத்தை வழங்க ஒப்புக்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×