என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் அபாயத்தில் இருந்து டாக்டர், மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க விசேஷ கவச உடை
Byமாலை மலர்4 April 2020 7:20 AM GMT (Updated: 4 April 2020 7:20 AM GMT)
கொரோனா வைரஸ் அபாயத்தில் இருந்து டாக்டர், மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க பொதுத்துறை நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. ‘பயோ சூட்’ எனப்படும் விசேஷ கவச உடையை தயாரித்துள்ளது.
பாலசோர்:
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில், டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கருத்திற்கொண்டு, பொதுத்துறை நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) ‘பயோ சூட்’ எனப்படும் விசேஷ கவச உடையை தயாரித்துள்ளது.
இந்த உடை, தற்போது பல கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது. பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஆயிரக்கணக்கில் இந்த உடைகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் டி.ஆர்.டி.ஓ. ஒப்பந்தம் செய்துள்ளது. நாள்தோறும் 15 ஆயிரம் கவச உடைகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X