என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் சிக்கித் தவித்த 112 பிரான்ஸ் மக்களை சிறப்பு விமானத்தில் அனுப்பி வைத்தது அரசு
Byமாலை மலர்4 April 2020 6:03 AM GMT (Updated: 4 April 2020 6:03 AM GMT)
ஊரடங்கு உத்தரவால் கேரளாவில் சிக்கித்தவித்த பிரான்ஸ் நாட்டு மக்கள் 112 பேர், சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொச்சி:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு பயணிகள் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அவ்வகையில் ஊரடங்கு உத்தரவால் கேரளாவில் சிக்கித் தவித்த 112 பிரான்ஸ் நாட்டவர்கள் இன்று சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கொச்சி விமான நிலையத்தில் இருந்து அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களின் உடைமைகள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கிருமிகள் நீக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X