என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு நடவடிக்கை- மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை
Byமாலை மலர்3 April 2020 5:25 AM GMT (Updated: 3 April 2020 5:25 AM GMT)
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலமாக நடந்த இந்த ஆலோசனையின்போது, கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார். மேலும், மாநில ஆளுநர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். இந்த ஆலோசனையின்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் பங்கேற்றார்.
பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X