search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 320 ஆக உயர்வு

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிராவில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மாநில தலைநகரான மும்பையில் இந்த கொடிய கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அதுமட்டுமின்றி மும்பை புறநகர் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி மகாராஷ்டிராவில் 308 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது தெரியவந்தது.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×