என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழிலாளர்களிடம் ஒரு மாத வீட்டு வாடகை வாங்க கூடாது- உள்துறை அமைச்சகம் உத்தரவு
Byமாலை மலர்30 March 2020 8:18 AM GMT (Updated: 30 March 2020 8:18 AM GMT)
ஊரடங்கு உத்தரவு காரணமாக இடம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களிடம் ஒரு மாதத்துக்கான வீட்டு வாடகையை உரிமையாளர்கள் வாங்க கூடாது என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
கொரோனா பரவுவதை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், கட்டிட பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
இதனால் அவர்கள் வருமானமின்றி திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சக செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்ப உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
இடம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களிடம் ஒரு மாதத்துக்கான வீட்டு வாடகையை உரிமையாளர்கள் வாங்க கூடாது.
வீட்டு உரிமையாளர்கள் அவர்களது வீடுகளில் வாடகைக்கு இருக்கும் தொழிலாளர்களையும், மாணவர்களையும் வலுகட்டாயமாக வெளியேற்ற கூடாது. இந்த உத்தரவுகளை மீறினால் அவர்கள் மீது மாநில அரசுகள் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களின் சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யக்கூடாது.
மேலும் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகளுக்கு உணவு, இருப்பிட வசதியை மாநில அரசு செய்து தர வேண்டும்.
இவ்வாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கொரோனா பரவுவதை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், கட்டிட பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
இதனால் அவர்கள் வருமானமின்றி திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சக செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்ப உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
இடம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களிடம் ஒரு மாதத்துக்கான வீட்டு வாடகையை உரிமையாளர்கள் வாங்க கூடாது.
வீட்டு உரிமையாளர்கள் அவர்களது வீடுகளில் வாடகைக்கு இருக்கும் தொழிலாளர்களையும், மாணவர்களையும் வலுகட்டாயமாக வெளியேற்ற கூடாது. இந்த உத்தரவுகளை மீறினால் அவர்கள் மீது மாநில அரசுகள் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களின் சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யக்கூடாது.
மேலும் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகளுக்கு உணவு, இருப்பிட வசதியை மாநில அரசு செய்து தர வேண்டும்.
இவ்வாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X