என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி, உத்தரபிரதேசத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்
Byமாலை மலர்30 March 2020 7:38 AM GMT (Updated: 30 March 2020 7:38 AM GMT)
மராட்டியம், கேரளாவை தொடர்ந்து டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் முதன்முதலாக கேரளாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் பல மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் 27 மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு உள்ளது. கடந்த 3 நாட்களாக தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 130 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளம், மராட்டிய மாநிலங்களில் இந்த வைரசின் வீரியம் அதிகமாக உள்ளது.
இந்த இரு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது. நேற்று மராட்டியத்தில் 17 பேருக்கு பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் நேற்று புதிதாக 20 பேருக்கு பாதிப்பு உறுதியானதால் நோயாளிகள் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மாநிலங்களைத் தொடர்ந்து டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் புதிதாக 23 பேரையும், உத்தரபிரதேசத் தில் 19 பேரையும் வைரஸ் தாக்கியிருப்பது நேற்று தெரிய வந்தது.
இதனால் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 ஆகவும், உத்தரபிரதேசத்தில் 80 ஆகவும் உயர்ந்தது.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் முதன்முதலாக கேரளாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் பல மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் 27 மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு உள்ளது. கடந்த 3 நாட்களாக தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 130 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளம், மராட்டிய மாநிலங்களில் இந்த வைரசின் வீரியம் அதிகமாக உள்ளது.
இந்த இரு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது. நேற்று மராட்டியத்தில் 17 பேருக்கு பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் நேற்று புதிதாக 20 பேருக்கு பாதிப்பு உறுதியானதால் நோயாளிகள் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மாநிலங்களைத் தொடர்ந்து டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் புதிதாக 23 பேரையும், உத்தரபிரதேசத் தில் 19 பேரையும் வைரஸ் தாக்கியிருப்பது நேற்று தெரிய வந்தது.
இதனால் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 ஆகவும், உத்தரபிரதேசத்தில் 80 ஆகவும் உயர்ந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X