என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிற மாநில தொழிலாளர்களுக்காக பஸ் விடவேண்டும்-பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
Byமாலை மலர்29 March 2020 5:45 AM GMT (Updated: 29 March 2020 5:45 AM GMT)
21 நாட்கள் ஊரடங்கு காரணமாக, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் இருக்கும் பிற மாநில தொழிலாளர்களுக்கு பஸ் விட வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பிற மாநிலங்களுக்கு சென்று வேலை பார்த்த தொழிலாளர்கள் 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் உள்ளனர். பலர் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்துசெல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் பலர் ஓட்டல்கள், விடுதிகளில் தங்கியுள்ளனர். அவர்களும் செலவுக்கு பணம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
எனவே தேசிய அளவில் ஒரு அறிவுரை வழங்க வேண்டும். அவர்களுக்காக ஒரு முறை பஸ் போக்குவரத்து விடவேண்டும். அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இடம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட வேண்டும். இது 21 நாட்கள் ஊரடங்கு தோல்வி அடைந்ததாக ஆகாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X