என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கால் அவதிப்படும் காஷ்மீரி மாணவர்களுக்கு உதவுங்கள் - அமித்ஷாவுக்கு குலாம் நபி ஆசாத் வேண்டுகோள்
Byமாலை மலர்28 March 2020 9:51 AM GMT (Updated: 28 March 2020 9:51 AM GMT)
21 நாள் ஊரடங்கால் நாடுமுழுவதும் தவிக்கும் காஷ்மீரி மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும் என உள்துறை மந்திரிக்கு காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் உள்ள 190-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், உள்துறை மந்திரி அமித் ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கால் நாடு முழுவதும் ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் காஷ்மீரி மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X