என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி - முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு
Byமாலை மலர்23 March 2020 2:36 PM GMT (Updated: 23 March 2020 2:36 PM GMT)
கமல்நாத் ராஜினாமாவை தொடர்ந்து மத்திய பிரதேசம் முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான்-ஐ பாஜக எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை தேர்வு செய்துள்ளனர்.
போபால்:
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் 6 மந்திரிகளின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றார்.
சமீபத்தில், ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் போபாலில் இன்றிரவு 7 மணியளவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கவர்னர் மாளிகையில் இன்றிரவு 9 மணியளவில் பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையில் மீண்டும் அமையும் புதிய அரசில் நான்காவது முறையாக அம்மாநில முதல் மந்திரியாக பதவி ஏற்பவர் என்னும் சிறப்பை சிவராஜ் சிங் சவுகான் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் 6 மந்திரிகளின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றார்.
மற்றவர்களின் ராஜினாமா கடிதங்களையும் ஏற்றதாக பின்னர் அறிவித்தார். இதனால் கமல்நாத் தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்தது. முதல் மந்திரி பதவியை கமல்நாத் ராஜினாமா செய்தார்.
சமீபத்தில், ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் போபாலில் இன்றிரவு 7 மணியளவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கவர்னர் மாளிகையில் இன்றிரவு 9 மணியளவில் பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையில் மீண்டும் அமையும் புதிய அரசில் நான்காவது முறையாக அம்மாநில முதல் மந்திரியாக பதவி ஏற்பவர் என்னும் சிறப்பை சிவராஜ் சிங் சவுகான் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X