search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரூக் அப்துல்லா
    X
    பரூக் அப்துல்லா

    கொரோனா வைரசை கட்டுப்படுத்த பரூக் அப்துல்லா ரூ.1 கோடி நிதி

    வீட்டுக் காவலில் இருந்து சமீபத்தில் விடுதலையான காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கொரோனா வைரசை கட்டுப்படுத்த தனது எம்.பி. நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை பறிக்கும் வகையில் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் உருவாக்கப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
     
    இதை எதிர்த்து காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் பிரிவினைவாத குழுக்களின் தலைவர்களும் போராட்டத்தில் குதித்தனர். பொதுமக்களும் மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் பரவலாக ஈடுபட்டனர்.

    போராட்டங்கள் மேலும் பரவாத வகையில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையதளங்களுக்கான இணைப்புகள் மற்றும் கைபேசி இணைப்புகளும் சில மாதங்கள் முடக்கி வைக்கப்பட்டது.

    காஷ்மீரின் முக்கிய தலைவர்கள் பலர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், காஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சிகள் சமீபத்தில் வலியுறுத்தின.

    பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வைக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக் காவல் ரத்து செய்யப்பட்டு அவர் சமீபத்தில் விடுதலையானார்.

    இந்நிலையில், ஸ்ரீநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்கும் பரூக் அப்துல்லா தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
     
    Next Story
    ×