என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் 8-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து: மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவிப்பு
Byமாலை மலர்21 March 2020 1:53 AM GMT (Updated: 21 March 2020 1:53 AM GMT)
மகாராஷ்டிராவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார்.
மும்பை :
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று மாநில பள்ளி கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை எஞ்சி உள்ள 2 பரீட்சைகள் நடைபெறும். 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும். மற்ற ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம்.
இவ்வாறு மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறினார்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று மாநில பள்ளி கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை எஞ்சி உள்ள 2 பரீட்சைகள் நடைபெறும். 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும். மற்ற ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம்.
இவ்வாறு மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X