என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரீட்சை எழுதாமல் பாஸ் ஆன உ.பி. மாணவர்கள்
Byமாலை மலர்18 March 2020 6:34 AM GMT (Updated: 18 March 2020 6:34 AM GMT)
உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ/மாணவிகள் பொதுத்தேர்வு எழுதாமல் அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லக்னோ:
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 147 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் பள்ளிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ/மாணவிகளுக்கு வரும் 23 முதல் 28-ம் தேதி வரை இறுதித்தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் தேர்வு நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள 1 முதல் 8-ம் வகுப்பு மாணவ/மாணவிகள் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஏப்ரல் 2-ம் தேதி வரை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 147 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் பள்ளிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ/மாணவிகளுக்கு வரும் 23 முதல் 28-ம் தேதி வரை இறுதித்தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் தேர்வு நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள 1 முதல் 8-ம் வகுப்பு மாணவ/மாணவிகள் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஏப்ரல் 2-ம் தேதி வரை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X