search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றவாளி முகேஷ் சிங்
    X
    குற்றவாளி முகேஷ் சிங்

    நிர்பயா வழக்கு : தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி தாக்கல் செய்த மேலும் ஒரு மனு தள்ளுபடி

    நிர்பயா வழக்கில் தன்னை தூக்கிலிடக்கூடாது என குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சி மேற்கொண்டுவருகிறனர்.

    இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில் குற்றம் நடைபெற்ற 2012 டிசம்பர் 16-ம் தேதி தான் டெல்லியிலேயே இல்லை எனவும் குற்றம் நடந்த நாளுக்கு மறுநாள் (டிசம்பர் 17) தன்னை ராஜஸ்தானில் வைத்து போலீசார் கைது செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

    இதனால் தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுமீது டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றவாளி தாக்கல் செய்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    Next Story
    ×