search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரூக் அப்துல்லாவுடன் குலாம் நபி ஆசாத்
    X
    பரூக் அப்துல்லாவுடன் குலாம் நபி ஆசாத்

    காஷ்மீர்: பரூக் அப்துல்லாவுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு

    காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீரில் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து, வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா 7 மாதங்களுக்கு பின்னர் நேற்று விடுதலை ஆனார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான குலாம் நபி ஆசாத் இன்று பரூக் அப்துல்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    நிருபர்களுக்கு பேட்டியளித்த குலாம் நபி ஆசாத்

    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குலாம் நபி ஆசாத், கைதான அனைத்து அரசியல் தலைவர்களையும் மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

    ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பறித்து, இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது இங்கு வாழும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்ட அவர், முறைப்படி இங்கு அரசியல் முன்னெடுப்புகள் நடைபெற வேண்டும்.

    பறிக்கப்பட்ட மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும். சட்டசபைக்கு உரிய முறையில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
    Next Story
    ×