search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு பணியில் படைவீரர்கள்
    X
    பாதுகாப்பு பணியில் படைவீரர்கள்

    காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

    ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார்.
    ஸ்ரீநகர்:
     
    ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில், இன்றும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறலில் ஈடுபட்டது. பூஞ்ச் மாவட்டத்தை ஓட்டியுள்ள எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.

    இந்த தாக்குதலில் மெண்டார் செக்டார் பகுதியை சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். பாதுகாப்புப் படையினர் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×