என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
7-ம் வகுப்பு தேர்வு எழுதும் 105 வயது மூதாட்டி
Byமாலை மலர்13 March 2020 8:33 AM GMT (Updated: 13 March 2020 8:33 AM GMT)
உலக மகளிர் தினத்தன்று சிறந்த பெண்மணிக்கான ஜனாதிபதி விருது பெற்ற பாகீரதி அம்மா 7-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருவதாகவும் தேர்வில் வெற்றி பெற்றதும் 10-ம் வகுப்பு தேர்வை எழுதுவேன் என்றும் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் முதியோர் கல்வி திட்டத்தில் வயது முதிர்ந்த மூதாட்டிகள் பலரும் படித்து வருகிறார்கள்.
கொல்லம் பகுதியைச் சேர்ந்த பாகீரதி அம்மா என்ற 105 வயது மூதாட்டி முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து 4-ம் நிலை தேர்வில் வெற்றி பெற்றார். அவர், அடுத்து 7-ம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினார்.
இதற்காக கேரள முதியோர் கல்வி திட்ட இயக்குனர், மூதாட்டி பாகீரதி அம்மா வீட்டிற்கு நேரில் சென்று தேர்வு விண்ணப்பத்தை வழங்கினார்.
பாகீரதி அம்மா பற்றிய தகவல்களை அறிந்த பிரதமர் நரேந்திரமோடி தனது மன்கிபாத் நிகழ்ச்சியில் பாகீரதி அம்மாவின் தன்னம்பிக்கை, முதிய வயதிலும் கல்வியில் காட்டும் ஆர்வம் பற்றி பாராட்டி பேசினார்.
இந்நிலையில் பாகீரதி அம்மாவிற்கு உலக மகளிர் தினத்தன்று சிறந்த பெண்களுக்கு அளிக்கப்படும் சிறந்த பெண்மணிக்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது.
விருது பெற்ற பாகீரதி அம்மா 7-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறார். அவர், கூறியதாவது:-
7-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறேன். தேர்வில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். வெற்றி பெற்றதும் 10-ம் வகுப்பு தேர்வையும் எழுதுவேன் என்றார்.
பாகீரதி அம்மாவுக்கு இதுவரை ஆதார் கார்டோ, அரசின் முதியோர் ஓய்வூதியமோ கிடைக்கவில்லை. அவரை பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியான பிறகு இப்போது முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை மாவட்ட நிர்வாகம் வழங்கி உள்ளது. இனி அவருக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் கிடைக்கும்.
கேரளாவில் முதியோர் கல்வி திட்டத்தில் வயது முதிர்ந்த மூதாட்டிகள் பலரும் படித்து வருகிறார்கள்.
கொல்லம் பகுதியைச் சேர்ந்த பாகீரதி அம்மா என்ற 105 வயது மூதாட்டி முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து 4-ம் நிலை தேர்வில் வெற்றி பெற்றார். அவர், அடுத்து 7-ம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினார்.
இதற்காக கேரள முதியோர் கல்வி திட்ட இயக்குனர், மூதாட்டி பாகீரதி அம்மா வீட்டிற்கு நேரில் சென்று தேர்வு விண்ணப்பத்தை வழங்கினார்.
பாகீரதி அம்மா பற்றிய தகவல்களை அறிந்த பிரதமர் நரேந்திரமோடி தனது மன்கிபாத் நிகழ்ச்சியில் பாகீரதி அம்மாவின் தன்னம்பிக்கை, முதிய வயதிலும் கல்வியில் காட்டும் ஆர்வம் பற்றி பாராட்டி பேசினார்.
இந்நிலையில் பாகீரதி அம்மாவிற்கு உலக மகளிர் தினத்தன்று சிறந்த பெண்களுக்கு அளிக்கப்படும் சிறந்த பெண்மணிக்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது.
விருது பெற்ற பாகீரதி அம்மா 7-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறார். அவர், கூறியதாவது:-
7-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறேன். தேர்வில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். வெற்றி பெற்றதும் 10-ம் வகுப்பு தேர்வையும் எழுதுவேன் என்றார்.
பாகீரதி அம்மாவுக்கு இதுவரை ஆதார் கார்டோ, அரசின் முதியோர் ஓய்வூதியமோ கிடைக்கவில்லை. அவரை பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியான பிறகு இப்போது முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை மாவட்ட நிர்வாகம் வழங்கி உள்ளது. இனி அவருக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் கிடைக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X