search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் இன்றும் தாக்குதல்

    ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று மாலை துப்பாக்கிகளால் சுட்டு நடத்திய தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
    ஜம்மு:

    இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    கோப்புப் படம்

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், ஷாப்பூர் மற்றும் கசபா ஆகிய இடங்களில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று பிற்பகல் மாலை சுமார் 6  மணியளவில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்திய வீரர்களும் இந்த தாக்குதலுக்கு தகுந்த வகையில் பதிலடி கொடுத்து வருகின்றனர். கடைசியாக கிடைத்த தகவல்களின்படி, இருதரப்பினரிடையே நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

    Next Story
    ×