என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய கட்சி தொடங்கினார் காஷ்மீர் முன்னாள் மந்திரி அல்தாப் புகாரி
Byமாலை மலர்8 March 2020 10:20 AM GMT (Updated: 8 March 2020 12:07 PM GMT)
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் காஷ்மீர் முன்னாள் மந்திரி அல்தாப் புகாரி ஜம்மு-காஷ்மீர் அப்னி பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை இன்று தொடங்கினார்.
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் முன்னர் சிறப்பு அந்தஸ்துடன் கூடிய தனி மாநிலமாக இருந்தபோது முதல் மந்திரி மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் சையத் அல்தாப் புகாரி.
ஸ்ரீநகரில் உள்ள அல்தாப் புகாரியின் இல்லத்தில் இன்று நடைபெற்ற புதிய கட்சியின் துவக்க விழாவில் மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் தங்களை ஜம்மு-காஷ்மீர் அப்னி பார்ட்டியில் இணைத்து கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் நிலைநாட்டுவது, இங்கு வாழும் மக்களின் வாழ்வுரிமை, நில உரிமை மற்றும் வேலைவாய்ப்புக்கான உரிமைகளை நிலைநாட்டுவதே சாமானிய மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ள எங்கள் புதிய கட்சியின் நோக்கமாகும் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அல்தாப் புகாரி குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னர் சிறப்பு அந்தஸ்துடன் கூடிய தனி மாநிலமாக இருந்தபோது முதல் மந்திரி மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் சையத் அல்தாப் புகாரி.
அக்கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய அல்தாப் புகாரி, ஜம்மு-காஷ்மீர் அப்னி பார்ட்டி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை இன்று தொடங்கினார்.
ஸ்ரீநகரில் உள்ள அல்தாப் புகாரியின் இல்லத்தில் இன்று நடைபெற்ற புதிய கட்சியின் துவக்க விழாவில் மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் தங்களை ஜம்மு-காஷ்மீர் அப்னி பார்ட்டியில் இணைத்து கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் நிலைநாட்டுவது, இங்கு வாழும் மக்களின் வாழ்வுரிமை, நில உரிமை மற்றும் வேலைவாய்ப்புக்கான உரிமைகளை நிலைநாட்டுவதே சாமானிய மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ள எங்கள் புதிய கட்சியின் நோக்கமாகும் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அல்தாப் புகாரி குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X