என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 பெண்களுக்கு மம்தா அளித்த மகளிர் தினப் பரிசு
Byமாலை மலர்8 March 2020 9:55 AM GMT (Updated: 8 March 2020 9:55 AM GMT)
பாராளுமன்ற மேல்சபையில் காலியாகும் 4 இடங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் இரு பெண் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொல்கத்தா
மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, பாராளுமன்ற மேல்சபை எம்.பி.க்களாக இருக்கும் 4 உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், அந்த பதவிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அர்பிதா கோஷ், மவுசம் நூர் ஆகிய இரு பெண்கள் மற்றும் தினேஷ் திரிவேதி, சுப்ரதா பக்ஷி ஆகியோர் நால்வரை அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி இன்று வேட்பாளர்களாக அறிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினமான இன்று இதற்கான அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மம்தா, ‘வேட்பாளர்களில் சரிபாதி பேர் பெண்கள்.., பெண்களுக்கு அதிகாரமளிக்கும் எனது முயற்சியில் இதுவும் ஒரு பகுதி’ என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X