என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 1 கோடி நிதி - உத்தவ் தாக்கரே அறிவிப்பு
Byமாலை மலர்7 March 2020 9:45 AM GMT (Updated: 7 March 2020 9:45 AM GMT)
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தனது அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
லக்னோ:
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியின் சார்பில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மாநில முதல் மந்திரியாக செயல்பட்டுவருகிறார்.
இந்நிலையில், முதல் மந்திரியாக பொறுப்பேற்று 100 நாட்கள் ஆனதையொட்டி உத்தவ் தாக்கரே அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக இன்று உத்தர பிரதேசம் சென்றார்.
அயோத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய உத்தவ் தாக்கரே, ''நான் கடவுள் ராமரின் ஆசிர்வாதம் கிடைக்க இங்கு வந்துள்ளேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான் அயோத்திக்கு வருவது இது மூன்றாவது முறை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மகாராஷ்டிரா அரசு சார்பாக அல்லாமல் எனது அறக்கட்டளை சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X