என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்டனையை தாமதப்படுத்த புதிய முயற்சி - நிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் மனு
Byமாலை மலர்6 March 2020 10:20 AM GMT (Updated: 6 March 2020 1:18 PM GMT)
நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தண்டனையை தாமதப்படுத்தும் விதமாக சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:
கடந்த 2012-ம் ஆண்டு நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய், பவன் குமார், அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, சீராய்வு மனு என தாக்கல் செய்யப்பட்டதால் 3 முறை தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகளை மார்ச் 20-ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட நேற்று உத்தரவிட்டது.
அந்த மனுவில், தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய சீராய்வு மனு மற்றும் கருணை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே சட்ட, அரசியல் சாசன வாய்ப்புகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், குற்றவாளி முகேஷ் சிங் புதிய மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X