search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரோ
    X
    இஸ்ரோ

    தொழில்நுட்ப கோளாறால் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் ஏவப்படுவது ஒத்திவைப்பு

    ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பூமி கண்காணிப்புக்காக ஜிசாட்-1 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி-எப்10 என்ற ராக்கெட் மூலம் நாளை மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கான இறுதிக்கட்ட பணியான கவுண்ட்டவுன் இன்று பகல் 3 மணி அளவில் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. கோளாறு சரிசெய்யப்பட்டதும் விண்ணில் ஏவப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×