என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடனடியாக விவாதிக்க வேண்டும்... எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Byமாலை மலர்4 March 2020 7:10 AM GMT (Updated: 4 March 2020 7:10 AM GMT)
டெல்லி வன்முறை தொடர்பாக உடனடியாக விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றம் முடங்கியது. மூன்றாவது நாளாக இன்றும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்றைய அலுவல்களை ஒத்திவைத்து, டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஏற்கவில்லை.
டெல்லி வன்முறையை தீவிர பிரச்சினையாக கருதி பரிசீலனை செய்வதாகவும், ஹோலி விடுமுறைக்கு பிறகு அவையில் விவாதிக்கப்படும் என்றும் அவைத்தலைவர் கூறினார்.
அவைத்தலைவரின் முடிவை ஏற்காத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உடனடியாக விவாதிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். சில உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. எனவே, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X