என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்க சிறையில் வன்முறை- தடுக்க சென்ற அதிகாரி மீது கைதிகள் தாக்குதல்
Byமாலை மலர்3 March 2020 7:24 AM GMT (Updated: 3 March 2020 7:24 AM GMT)
மேற்கு வங்க மாநிலம் பரூய்பூர் சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட பிரச்சினை பெரும் வன்முறையாக மாறியது.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் பரூய்பூர் சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடையே நேற்று மாலை திடீரென மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினரிடையே ஏற்பட்ட இந்த சண்டையின்போது, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். கற்களை வீசி தாக்கினர். சிறை வளாகத்தில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.
உடனே சிறை பாதுகாவலர்கள் உள்ளே சென்று மோதலை தடுத்து நிறுத்தினர். சிறையின் துணை அதிகாரி ஷியாமல் பட்டாச்சார்யா இரு குழுவினரையும் அமைதிப்படுத்த முயன்றார். அப்போது அவரை கைதிகள் சிலர் தாக்கி உள்ளனர். இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மோதலைத் தொடர்ந்து சிறையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட கைதிகளிடம் மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து வன்முறை முடிவுக்கு வந்தது.
இந்த மோதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. சிறை நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாக கைதிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X