என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்
Byமாலை மலர்3 March 2020 4:27 AM GMT (Updated: 3 March 2020 4:27 AM GMT)
ஆதார் கார்டு எண்ணை பான்கார்டுடன் குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:
பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கால அவகாசமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இறுதி வாய்ப்பாக இந்த மாதம் 31-ந்தேதிக்குள் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பான்கார்டு வைத்து இருப்பவர்கள் அனைவரும் இந்த மாதம் (மார்ச்) 31-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை அதில் இணைக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய பான்கார்டு செயல்படாமல் முடங்கி விடும்.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். பான்கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்.
ஆனால், 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணபரிமாற்றத்துக்கு பான்கார்டை பயன்படுத்தும் போது அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த மாதம் 31-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காத பான்கார்டு முடக்கப்படும். என்றாலும் ஆதார் எண்ணை இணைத்தால் மீண்டும் செயல்பட தொடங்கி விடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கால அவகாசமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இறுதி வாய்ப்பாக இந்த மாதம் 31-ந்தேதிக்குள் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பான்கார்டு வைத்து இருப்பவர்கள் அனைவரும் இந்த மாதம் (மார்ச்) 31-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை அதில் இணைக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய பான்கார்டு செயல்படாமல் முடங்கி விடும்.
ஆதார் கார்டு எண்ணை பான்கார்டுடன் குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும்.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். பான்கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்.
ஆனால், 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணபரிமாற்றத்துக்கு பான்கார்டை பயன்படுத்தும் போது அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த மாதம் 31-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காத பான்கார்டு முடக்கப்படும். என்றாலும் ஆதார் எண்ணை இணைத்தால் மீண்டும் செயல்பட தொடங்கி விடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X