என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மகாராஷ்டிரா மாறும்: ஆதித்ய தாக்கரே
Byமாலை மலர்29 Feb 2020 2:18 AM GMT (Updated: 29 Feb 2020 2:19 AM GMT)
வருகிற மே 1-ந் தேதிக்குள் மகாராஷ்டிரா ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாறும் என மந்திரி ஆதித்ய தாக்கரே மேல்-சபையில் அறிவித்தார்.
மும்பை
மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் தடை சரிவர அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே தீவிரம் காட்டி வருகிறார்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான செயல்திட்டத்தை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில, நேற்று மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், கேரி பைகள், கப் மற்றும் தட்டுகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்கனவே மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பொருட்கள் இன்னும் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன என்று பேசினார்.
இதற்கு சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே பதிலளித்து பேசுகையில், “வருகிற மே 1-ந் தேதிக்குள் மகாராஷ்டிரா ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாறும். இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி எனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். குளிர்பானங்களின் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் தடை சரிவர அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே தீவிரம் காட்டி வருகிறார்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான செயல்திட்டத்தை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில, நேற்று மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், கேரி பைகள், கப் மற்றும் தட்டுகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்கனவே மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பொருட்கள் இன்னும் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன என்று பேசினார்.
இதற்கு சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே பதிலளித்து பேசுகையில், “வருகிற மே 1-ந் தேதிக்குள் மகாராஷ்டிரா ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாறும். இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி எனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். குளிர்பானங்களின் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X