search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்
    X
    ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்

    டெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது - ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேட்டி

    டெல்லியில் இயல்பு நிலை திரும்புவதாக மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியில் போராட்டத்தின்போது திடீர் மோதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களால் 34 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வன்முறை நிகழாமல் தடுக்க அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று பெங்களூரு வந்தார். அதற்கு முன்பு அவர் எச்.ஏ.எல். நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.

    அப்போது அவரிடம் டெல்லி வன்முறை சம்பவம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராஜ்நாத்சிங், ‘டெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது’ என்றார்.

    டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் ராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறியதை சுட்டிக்காட்டி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ராஜ்நாத்சிங், பதிலளிக்க மறுத்துவிட்டார்.
    Next Story
    ×