என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது - ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேட்டி
Byமாலை மலர்28 Feb 2020 12:36 AM GMT (Updated: 28 Feb 2020 12:36 AM GMT)
டெல்லியில் இயல்பு நிலை திரும்புவதாக மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியில் போராட்டத்தின்போது திடீர் மோதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களால் 34 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வன்முறை நிகழாமல் தடுக்க அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று பெங்களூரு வந்தார். அதற்கு முன்பு அவர் எச்.ஏ.எல். நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.
அப்போது அவரிடம் டெல்லி வன்முறை சம்பவம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராஜ்நாத்சிங், ‘டெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது’ என்றார்.
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் ராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறியதை சுட்டிக்காட்டி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ராஜ்நாத்சிங், பதிலளிக்க மறுத்துவிட்டார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியில் போராட்டத்தின்போது திடீர் மோதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களால் 34 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வன்முறை நிகழாமல் தடுக்க அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று பெங்களூரு வந்தார். அதற்கு முன்பு அவர் எச்.ஏ.எல். நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.
அப்போது அவரிடம் டெல்லி வன்முறை சம்பவம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராஜ்நாத்சிங், ‘டெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது’ என்றார்.
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் ராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறியதை சுட்டிக்காட்டி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ராஜ்நாத்சிங், பதிலளிக்க மறுத்துவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X