என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்குவங்காளம்: சட்டவிரோத ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
Byமாலை மலர்27 Feb 2020 7:19 PM GMT (Updated: 27 Feb 2020 7:19 PM GMT)
மேற்குவங்காளத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக ஆயுதங்களை தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா:
மேற்குவங்காள மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் நிம்டா பகுதியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கும் இடம் இயக்கிவருவதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
இதையடுத்து நிம்டா நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் அம்மாநில சிஐடி போலீசார் நேற்று அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையில் அந்நகரின் ஸ்ரீதுர்கபள்ளி என்ற பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கிகள், நாட்டு வெடிபொருட்கள் என பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X