என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டை பாதுகாப்பதற்காக எல்லை தாண்ட ராணுவம் தயங்காது- ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
Byமாலை மலர்27 Feb 2020 3:20 AM GMT (Updated: 27 Feb 2020 3:20 AM GMT)
பயங்கரவாத அபாயத்தில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, நமது படைகள் எல்லை தாண்டி செல்லவும் தயங்காது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள். இதற்கு பழிதீர்க்கும் வகையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந் தேதி, பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய போர் விமானங்கள், பாலகோட் என்ற இடத்தில் இருந்த பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தன. பாலகோட் தாக்குதலின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவின் அணுகுமுறை பெருமளவு மாறி இருக்கிறது. பயங்கரவாத அபாயத்தில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, இப்போது நமது படைகள் எல்லை தாண்டி செல்லவும் தயங்காது. கடந்த 2016-ம் ஆண்டின் துல்லிய தாக்குதலும், 2019-ம் ஆண்டின் பாலகோட் தாக்குதலுமே இதற்கு சாட்சிகள். இந்த மாற்றத்தை கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி. புதிய, நம்பிக்கையான இந்தியா உருவாகி வருவதையே இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள். இதற்கு பழிதீர்க்கும் வகையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந் தேதி, பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய போர் விமானங்கள், பாலகோட் என்ற இடத்தில் இருந்த பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தன. பாலகோட் தாக்குதலின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவின் அணுகுமுறை பெருமளவு மாறி இருக்கிறது. பயங்கரவாத அபாயத்தில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, இப்போது நமது படைகள் எல்லை தாண்டி செல்லவும் தயங்காது. கடந்த 2016-ம் ஆண்டின் துல்லிய தாக்குதலும், 2019-ம் ஆண்டின் பாலகோட் தாக்குதலுமே இதற்கு சாட்சிகள். இந்த மாற்றத்தை கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி. புதிய, நம்பிக்கையான இந்தியா உருவாகி வருவதையே இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X