என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ஏ.டி.எம்.களில் அதிக 500 ரூபாய் நோட்டுகள் - வங்கிகள் நடவடிக்கை
Byமாலை மலர்26 Feb 2020 11:48 PM GMT (Updated: 26 Feb 2020 11:48 PM GMT)
ஏ.டி.எம். மையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை வினியோகிக்கும் பணிகளை வங்கிகள் தொடங்கி உள்ளன.
புதுடெல்லி:
வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏ.டி.எம். மையங்களில் சிறிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை வினியோகிப்பது என இந்தியன் வங்கி உள்பட சில வங்கிகள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது மக்களுக்கு சிரமமாக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்படுவதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் இப்படி ஒரு அறிவுறுத்தலை வங்கிகளுக்கு வழங்கவில்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். எனினும் இது தொடர்பாக தன்னிச்சையாகவே இந்த முடிவை பெரும்பாலான வங்கிகள் எடுத்திருந்தன.
அதன்படி தற்போது ஏ.டி.எம். மையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை வினியோகிக்கும் பணிகளை வங்கிகள் தொடங்கி உள்ளன. ஒருசில வங்கிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில், பிற வங்கிகளும் விரைவில் இந்த நடவடிக்கையை தொடங்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏ.டி.எம். மையங்களில் சிறிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை வினியோகிப்பது என இந்தியன் வங்கி உள்பட சில வங்கிகள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது மக்களுக்கு சிரமமாக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்படுவதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் இப்படி ஒரு அறிவுறுத்தலை வங்கிகளுக்கு வழங்கவில்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். எனினும் இது தொடர்பாக தன்னிச்சையாகவே இந்த முடிவை பெரும்பாலான வங்கிகள் எடுத்திருந்தன.
அதன்படி தற்போது ஏ.டி.எம். மையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை வினியோகிக்கும் பணிகளை வங்கிகள் தொடங்கி உள்ளன. ஒருசில வங்கிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில், பிற வங்கிகளும் விரைவில் இந்த நடவடிக்கையை தொடங்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X