என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 ரூபாய்க்காக ஆட்டோ டிரைவர் அடித்து கொலை - மும்பையில் சோகம்
Byமாலை மலர்26 Feb 2020 1:48 PM GMT (Updated: 26 Feb 2020 1:48 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐந்து ரூபாய் மீதம் கேட்ட ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு புறநகரில் போரிவலி பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் எரிவாயு நிரப்பும் நிலையம் ஒன்று உள்ளது.
ராம்துலார் சர்ஜூ யாதவ் (68) என்பவர் தனது மகனை அங்கு வரும்படி தொலைபேசியில் கூறிவிட்டு, தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு எரிவாயு நிரப்ப சென்றார்.
எரிவாயு நிலையத்தில் 205 ரூபாய்க்கு எரிவாயு நிரப்பினார். இதையடுத்து, அங்கிருந்த ஊழியரான சந்தோஷ் ஜாதவிடம் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அந்த ஊழியர் 295 ரூபாயில் ரூ.5 குறைத்துக் கொடுத்துள்ளார். மீதமுள்ள 5 ரூபாயை தரும்படி ராம்துலார் அந்த ஊழியரிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், ராம்துலார் மற்றும் அவரது மகன் என இருவரையும் திட்டியுள்ளார். அங்கிருந்த மற்ற ஊழியர்கள் அவர்களை அடித்து, உதைத்தனர். இதில் மயங்கி விழுந்த ராம்துலார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஆட்டோ டிரைவர் கொலை தொடர்பாக எரிவாயு நிலையத்தில் பணியாற்றிய 5 ஊழியர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X