என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வுகான் நகருக்கு இந்திய ராணுவ விமானம் இன்று புறப்படுகிறது
Byமாலை மலர்26 Feb 2020 9:14 AM GMT (Updated: 26 Feb 2020 9:14 AM GMT)
இந்திய விமானப்படையின் ராணுவ விமானமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகருக்கு புறப்படுகிறது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் உருவான சீனாவின் வுகான் நகரில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. 2 ஏர்-இந்தியா விமானங்களை அனுப்பி 650-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டு கொண்டுவந்தனர்.
பின்னர் அவர்களை இரு குழுக்களாக பிரித்து மருத்துவ முகாமில் வைத்து கண்காணித்தனர். 14 நாட்களுக்கு பிறகு அனைவரும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கிடையே வுகான் நகரில் தவிக்கும் மேலும் பல இந்தியர்களை மீட்டு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக இந்திய விமானப்படையின் ராணுவ விமானமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானத்தை அனுப்ப சீனாவிடம் அனுமதி கேட்டது. ஆனால் சீன அரசு அனுமதி தர தாமதம் செய்து வந்த நிலையில் தற்போது இந்திய விமானம் சீனாவுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய ராணுவ விமானம் இன்று சீனாவுக்கு புறப்பட்டு செல்கிறது. விமானத்தில் சீனாவுக்கு மருத்துவ உபகரணங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதை சீனாவிடம் வழங்கிவிட்டு 100 இந்தியர்களை விமானத்தில் அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உருவான சீனாவின் வுகான் நகரில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. 2 ஏர்-இந்தியா விமானங்களை அனுப்பி 650-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டு கொண்டுவந்தனர்.
பின்னர் அவர்களை இரு குழுக்களாக பிரித்து மருத்துவ முகாமில் வைத்து கண்காணித்தனர். 14 நாட்களுக்கு பிறகு அனைவரும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கிடையே வுகான் நகரில் தவிக்கும் மேலும் பல இந்தியர்களை மீட்டு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக இந்திய விமானப்படையின் ராணுவ விமானமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானத்தை அனுப்ப சீனாவிடம் அனுமதி கேட்டது. ஆனால் சீன அரசு அனுமதி தர தாமதம் செய்து வந்த நிலையில் தற்போது இந்திய விமானம் சீனாவுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய ராணுவ விமானம் இன்று சீனாவுக்கு புறப்பட்டு செல்கிறது. விமானத்தில் சீனாவுக்கு மருத்துவ உபகரணங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதை சீனாவிடம் வழங்கிவிட்டு 100 இந்தியர்களை விமானத்தில் அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X