என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரள வனப்பகுதியில் பாகிஸ்தான் தோட்டாக்கள்- முக்கிய தடயங்கள் சிக்கின
Byமாலை மலர்26 Feb 2020 5:39 AM GMT (Updated: 26 Feb 2020 5:39 AM GMT)
கேரள வனப்பகுதியில் பாகிஸ்தான் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் குளத்துப்புழா காட்டுப்பகுதியில் 30 அடி பாலம் அருகே புதரில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தோட்டாக்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவையாகும். கேரள வனப்பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ராணுவ உளவுத்துறை, மத்திய உளவுத்துறை அமைப்புகளான என்.ஐ.ஏ., ரா மற்றும் ஐ.பி. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.
குளத்துப்புழா மற்றும் தென்மலை உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியோடு இணைந்து உள்ளதால் வனப்பகுதியிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது வெளி மாநில தொழிலாளர்கள் சிலர் அந்த பகுதியில் சமீபத்தில் தங்கி வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. அவர்களில் சிலரை பிடித்து உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம் - குளத்துப்புழா-புனலூர் சாலையில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை உளவுப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
அந்த கேமராவில் பதிவான காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அதில் சில தடயங்கள் சிக்கி உள்ளது. இந்த தடயங்கள் மூலமும் விசாரணை நடந்து வருகிறது.
கேரள மாநிலம் குளத்துப்புழா காட்டுப்பகுதியில் 30 அடி பாலம் அருகே புதரில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தோட்டாக்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவையாகும். கேரள வனப்பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ராணுவ உளவுத்துறை, மத்திய உளவுத்துறை அமைப்புகளான என்.ஐ.ஏ., ரா மற்றும் ஐ.பி. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.
குளத்துப்புழா மற்றும் தென்மலை உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியோடு இணைந்து உள்ளதால் வனப்பகுதியிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது வெளி மாநில தொழிலாளர்கள் சிலர் அந்த பகுதியில் சமீபத்தில் தங்கி வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. அவர்களில் சிலரை பிடித்து உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம் - குளத்துப்புழா-புனலூர் சாலையில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை உளவுப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
அந்த கேமராவில் பதிவான காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அதில் சில தடயங்கள் சிக்கி உள்ளது. இந்த தடயங்கள் மூலமும் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X