என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘விவிபாட்’ தகவல்களை ஒரு வருடத்துக்கு முன்பே அழித்துவிட்டது - தேர்தல் கமிஷன் மீது புகார் மனு தாக்கல்
Byமாலை மலர்25 Feb 2020 11:34 PM GMT (Updated: 25 Feb 2020 11:34 PM GMT)
தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ‘விவிபாட்’ தகவல்களை ஒரு வருடத்துக்கு முன்பே அழித்துவிட்டதாக தேர்தல் கமிஷன் மீது சுப்ரீம் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட 2 தொண்டு நிறுவனங்கள் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், பாராளுமன்ற பொதுத்தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ‘விவிபாட்’ கருவியில் பதிவான தகவல்களை ஒரு வருடத்துக்கு அழிக்கக்கூடாது என்பது விதி. ஆனால் தேர்தல் கமிஷன் ஒரு வருடத்துக்கு முன்பே அந்த தகவல்களை அழித்துவிட்டது. எனவே வருங்காலத்தில் தேர்தல் தகவல் முரண்பாடுகளை விசாரிக்க ஒரு வலுவான நடைமுறையை வகுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதற்கு நீதிபதிகள், இப்போதைக்கு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X