search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்மரக்கட்டைகளுடன் கைதான 2 வாலிபர்களை படத்தில் காணலாம்.
    X
    செம்மரக்கட்டைகளுடன் கைதான 2 வாலிபர்களை படத்தில் காணலாம்.

    திருப்பதி அருகே செம்மரம் கடத்திய தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது

    திருப்பதி அருகே வனப்பகுதியில் செம்மரம் கடத்திய தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சந்திரகிரி மண்டலம் பீமாவரம் சேஷாசலம் வனபகுதியில் இன்று அதிகாலை செம்மரம் கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனபகுதியில் 2 வாகனங்களில் சிலர் செம்மரங்களை ஏற்றி கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால் செம்மரம் கடத்தல் கும்பலை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சேலத்தை சேர்ந்த சின்னதம்பி (25) கள்ளகுறிச்சியை சேர்ந்த ஜெயக்குமார் (24) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்தனர்.

    மேலும் 25 செம்மரக்கட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×