என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிநாட்டவர் வந்தால் மட்டுமே காந்தியின் மரபு நினைவுகூறப்படுகிறது - இல்டிஜா முப்தி
Byமாலை மலர்24 Feb 2020 2:07 PM GMT (Updated: 24 Feb 2020 2:07 PM GMT)
அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் 8 மில்லியன் காஷ்மீர் மக்கள் உள்ளனர், ஆனால் அரசோ அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையில் மும்முரமாக உள்ளது என மெஹ்பூபா முப்தியின் மகள் இல்டிஜா கூறியுள்ளார்.
ஸ்ரீநகர்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது குடும்பத்தாருடன் வந்துள்ள டிரம்பிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உரையாற்றிய டிரம்ப் இந்தியாவின் ஒற்றுமையயும், பிரதமர் மோடியின் செயல்களையும் பாராட்டினார். டிரம்ப் வரவேற்பு ஏற்பாடுகளுக்கு சுமார் ரூ.100 கோடி செலவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், டெல்லி பற்றி எரிகிறது, அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் 8 மில்லியன் காஷ்மீர் மக்கள் உள்ளனர், ஆனால் அரசோ அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையில் மும்முரமாக உள்ளது என காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி கூறியுள்ளார்.
‘வெளிநாட்டு தலைவர்கள் எவரேனும் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை புரிந்தால் மட்டுமே மகாத்மா காந்தியின் மரபு நினைவுகூறப்படுகிறது. அவரது மதிப்பீடுகள் மறக்கப்பட்டன. தலைநகர் டெல்லி பற்றி எரிகிறது. 8 மில்லியன் காஷ்மீர் மக்கள் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். ஆனால் அரசோ அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையில் மும்முரமாக உள்ளது’, என இல்டிஜா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X