என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி: சிஏஏ போராட்டத்தில் வன்முறை - தலைமை காவலர் உயிரிழப்பு
Byமாலை மலர்24 Feb 2020 11:11 AM GMT (Updated: 24 Feb 2020 11:25 AM GMT)
டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் இன்று நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லி:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் இன்று நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
கோலக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர் ரத்தன் லால். இவர் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார்.
இதையடுத்து டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது குடும்பத்தார் ஆகியோர் இன்று மாலை டெல்லியில் உள்ள ஆக்ராவிற்கு சென்று தாஜ்மகாலை பார்வையிடுகின்றனர். இதன் காரணமாக டெல்லி மாநகரில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X