என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
7 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறப்பு
Byமாலை மலர்24 Feb 2020 1:00 AM GMT (Updated: 24 Feb 2020 1:00 AM GMT)
காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் பள்ளிகளை திறக்க மாநில கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டதையடுத்து அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியது. அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மேலும் அங்கு பள்ளிகள் கடந்த 7 மாதங்களாக செயல்படவில்லை.
பள்ளிகளை திறக்க மாநில நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. பாதுகாப்பு காரணங்களுக்கான குழந்தைகளை அனுப்ப பெற்றோர் முன்வராததால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன.
இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் காஷ்மீரில் பள்ளிகளை திறக்க மாநில கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநில கல்வித்துறை இயக்குனர் முகம்மது யானூஸ் மாலிக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி ஸ்ரீநகரில் பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையும், காஷ்மீரில் காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டதையடுத்து அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியது. அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மேலும் அங்கு பள்ளிகள் கடந்த 7 மாதங்களாக செயல்படவில்லை.
பள்ளிகளை திறக்க மாநில நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. பாதுகாப்பு காரணங்களுக்கான குழந்தைகளை அனுப்ப பெற்றோர் முன்வராததால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன.
இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் காஷ்மீரில் பள்ளிகளை திறக்க மாநில கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநில கல்வித்துறை இயக்குனர் முகம்மது யானூஸ் மாலிக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி ஸ்ரீநகரில் பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையும், காஷ்மீரில் காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X